என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடைபாதை கடைகள் அகற்றம் - திருப்பூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வியாபாரிகள்
Byமாலை மலர்23 Oct 2021 4:37 AM GMT (Updated: 23 Oct 2021 4:37 AM GMT)
சி.ஐ.டி.யு., சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், செயலாளர் பாலன் தலைமையில் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட் சுற்றுப்பகுதியில் ஏராளமானோர் சாலையோரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இது போன்ற நடைபாதை கடைகளால் உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து நடைபாதை கடைகளை அகற்ற உத்தரவிட்டார். இதனால் கடைகள் அகற்றப்பட்டன.
இந்தநிலையில் சி.ஐ.டி.யு., சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர், செயலாளர் பாலன் தலைமையில் மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனுவில், பல்லடம் ரோடு உழவர் சந்தை பகுதியில் நீண்ட காலமாக நடைபாதை வியாபாரிகள் கடை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
தற்போது அக்கடைகள் அகற்றப்பட்டதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடைபாதை கடைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும். அதுவரை அவர்கள் அதே பகுதியில் கடை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X