search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

    உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் இலுப்பையூர் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 36), சுரேஷ் (38) உள்பட 4 பேரை கைது செய்தனர். இதேபோல் திருநாவலூர் அருகே திமி ரெட்டிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கோதண்டபாணி (45), ஜெய்சங்கர் (40), ஜெயசீலன் (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×