search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாங்குநேரி அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    நாங்குநேரி அருகே தொழிலாளியிடம் பணம் பறித்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள மீனவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47), தொழிலாளி.

    நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் நாங்குநேரி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து, அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் நகை உள்ளதா என்று சோதனை செய்தனர். நகை இல்லாததால், அவரிடம் இருந்த ரூ. 2500 ரொக்கப் பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து செல்வராஜ் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் நம்பி நகர் பகுதியைச் சேர்ந்த 3 பேர் பணம் பறித்தது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் நம்பி நகர் பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டி (23), செல்வம் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×