search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நவம்பர் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவு

    தனியார் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    1 முதல் 8-ம்வகுப்பு வரை வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கி வருகிறது. 

    அந்த வகையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து கல்வி பயில முடியாமல் தனியார் பள்ளிகளில் இடை நின்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அரசு பள்ளிகளில் நவம்பர் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×