search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடத்தில் பனியன் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    சமீபகாலமாக சதீஷ் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் கணவன் - மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரான் காலனியில் வசிப்பவர் சதீஷ் (வயது30). இவருக்கு சத்யா (26) என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

    இந்த நிலையில் சமீபகாலமாக சதீஷ் குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கணவன் - மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சதீஷ் குடித்துவிட்டு வந்ததால் கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதனால் மன வேதனை அடைந்த சதீஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்யா அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சதீஷின் தம்பி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×