என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களியக்காவிளை அருகே வாகனம் மோதி ரேசன் கடை ஊழியர் பலி
Byமாலை மலர்20 Oct 2021 6:58 AM GMT (Updated: 20 Oct 2021 6:58 AM GMT)
களியக்காவிளை அருகே இன்று காலை சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதியதில் ரேசன் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
களியக்காவிளை:
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). இவர் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து காப்புக்காடு ரேசன் கிடங்கில் பட்டியல் எழுத்தாளராக வேலை செய்து வந்தார். இன்று காலை டீ குடிப்பதற்காக திருத்துவபுரம் சந்திப்பில் உள்ள கடைக்கு சென்றார்.
சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாலகிருஷ்ணன் மீது மோதி விட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து களியக்காவிளை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). இவர் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து காப்புக்காடு ரேசன் கிடங்கில் பட்டியல் எழுத்தாளராக வேலை செய்து வந்தார். இன்று காலை டீ குடிப்பதற்காக திருத்துவபுரம் சந்திப்பில் உள்ள கடைக்கு சென்றார்.
சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாலகிருஷ்ணன் மீது மோதி விட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், பாலகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து களியக்காவிளை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X