search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    பல்லடம் சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

    சிறப்பு வழிபாட்டில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை வழிபட்டனர்.
    பல்லடம்:

    சிவாலயங்களில் பிரதோச பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ஐப்பசி மாத முதல் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

    மேலும் அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை வழிபட்டனர். 

    மேலும் பல்லடம் பகுதியிலுள்ள அருளானந்தஈஸ்வரர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோச பூஜை நடைபெற்றது. 
    Next Story
    ×