என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடுதல் போனஸ் வழங்க கோரி தொழிற்சங்கத்தினர் 21 - ந்தேதி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Oct 2021 9:38 AM GMT (Updated: 18 Oct 2021 9:38 AM GMT)
பின்னலாடைத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அனைத்து நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டமானது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ளது.
எனவே திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் டைம் ரேட், பீஸ் ரேட் அடிப்படையில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்.
பின்னலாடைத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அனைத்து நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21 - ந்தேதி (வியாழக்கிழமை) திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X