என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
Byமாலை மலர்18 Oct 2021 3:46 AM GMT (Updated: 18 Oct 2021 3:46 AM GMT)
பாடங்களை படிக்காமல் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடிதை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை ரத்தினபுரி அருகே உள்ள சுப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சுதாகர். கூலித் தொழிலாளி. இவரது மகள் ஹரினி (வயது 16). இவர் ராம்நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தால் ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக சுதாகர் தனது மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தார். தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் ஹரினி பாடங்களை படிக்காமல் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்.
இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ஹரினி வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள சுப்பம்மாள் நகரை சேர்ந்தவர் சுதாகர். கூலித் தொழிலாளி. இவரது மகள் ஹரினி (வயது 16). இவர் ராம்நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தால் ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக சுதாகர் தனது மகளுக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தார். தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் ஹரினி பாடங்களை படிக்காமல் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்.
இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ஹரினி வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X