search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நன்னிலம் அருகே அங்காடி பெண் ஊழியரிடம் தகராறு செய்தவர் கைது

    நன்னிலம் அருகே அங்காடி பெண் ஊழியரிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மூங்கில் குடிகிராமம், கங்களாஞ்சேரி மூங்கில்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கிராம அங்காடி கடையில் விற்பனையாளராக நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடி, மாதிரிமங்கலம் மனவெளி தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி ராஜேஸ்வரி (வயது 44) பணியாற்றி வருகிறார்.

    இவர் பணியில் இருந்போது, மூங்கில் குடி கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த முத்தையன் மகன் ஞானசேகரன் (37), அங்காடியில் பொருள் வாங்குவதற்கு சென்றுள்ளார். பொருட்களை பெறுவதற்காக கைரேகை வைக்குமாறு கூறும் பொழுது, தகாத வார்த்தையில் ராஜேஸ்வரியை திட்டியுள்ளார்.

    குடிபோதையில் இருந்த ஞானசேகரன் பணிசெய்யவிடாமல் தடுத்ததால் ராஜேஸ்வரி நன்னிலம் போலீசில் புகார் தெரிவிக்க, போலீசார் ஞானசேகரன் கைது செய்தனர்.

    Next Story
    ×