என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்
Byமாலை மலர்12 Oct 2021 11:31 AM GMT (Updated: 12 Oct 2021 1:14 PM GMT)
நவம்பர் 1-ந்தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள் தொடங்கப்படாததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, வருகிற 1-ந்தேதி (நவம்பர்) முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
நவம்பர் 1-ந்தேதி பள்ளிகள் தொடங்கப்பட்டால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘‘மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை. பொதுத்தேர்வுக்கு முன்னதாக டிசம்பர் மாதம் ஒரு தேர்வு நடத்தப்படும். திட்டமிட்டபடி நவம்பர் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X