என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி
Byமாலை மலர்12 Oct 2021 7:52 AM GMT (Updated: 12 Oct 2021 7:52 AM GMT)
இறந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிப்ராநாயக் மகன் கேத்ரா நாயக் என்பது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது, எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்தபோது இறந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, பிப்ராநாயக் மகன் கேத்ராநாயக் ( வயது 20) என்பதும், பல்லடம் அருகே சின்னகரையில் வாடகை வீட்டில், தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து அவரது சகோதரர் சஞ்சய் நாயக் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X