search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடம் அருகே பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி

    இறந்தவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிப்ராநாயக் மகன் கேத்ரா நாயக் என்பது தெரியவந்தது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது, எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்தபோது இறந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, பிப்ராநாயக் மகன் கேத்ராநாயக் ( வயது 20) என்பதும், பல்லடம் அருகே சின்னகரையில் வாடகை வீட்டில், தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. 

    இந்த விபத்து குறித்து அவரது சகோதரர் சஞ்சய் நாயக் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×