என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா
Byமாலை மலர்12 Oct 2021 6:54 AM GMT (Updated: 12 Oct 2021 9:57 AM GMT)
நிகழ்ச்சியில் இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஷெர்லின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
திருப்பூர்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி முதன்மை மாவட்ட நீதிபதியின் ஆணையின் படி சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் இன்று திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் பிரஷ்னேவ் தலைமை ஏற்று மாணவிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கினார். அவர் பேசுகையில், உலக பெண் குழந்தைகள் தினத்தில் உங்களுடன் உரையாடுவது மகிழ்ச்சி.
பெண் குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டியது அவசியம். தனக்கு தவறு ஏற்படும்போது விழிப்போடு இருந்து தன்னை காத்துக்கொள்வதோடு தவறுக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க சட்ட அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஷெர்லின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா மற்றும் எராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X