search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி பலி
    X
    தொழிலாளி பலி

    தொப்பூர் அருகே கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலி

    தொப்பூர் அருகே கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குதிரைசந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது45). இவர் வெள்ளக்கல் அடுத்த குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று வெள்ளக்கல் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மாது மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மாது பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×