search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

    விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 38). இவர் தான் குடியிருக்கும் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×