என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே தொழில் நஷ்டத்தால் பேக்கரி உரிமையாளர் தற்கொலை
Byமாலை மலர்10 Oct 2021 9:55 AM GMT (Updated: 10 Oct 2021 9:55 AM GMT)
கொரோனா தொற்று காரணமாக பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கதிரேசன் தொழில் நஷ்டம் குறித்து நண்பர்களிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 41). இவர் அதே பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தொழில் நஷ்டம் குறித்து நண்பர்களிடம் அடிக்கடி கூறியுள்ளார்.
மேலும் பேக்கரியை சரிவர நடத்த முடியாமல் மூடிவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் தனியே இருந்த அவர், வீட்டின் கூரை விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட கதிரேசனுக்கு தமிழரசி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X