search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    மதுரை வழியாக இயக்கப்படும் 4 ரெயில்களின் சேவை நீட்டிப்பு

    மதுரை வழியாக இயக்கப்படும் 4 சிறப்பு ரெயில்கள், வருகிற நவம்பர் முதல் வாரம் வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    மதுரை:

    மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை வழியாக இயக்கப்படும் 4 சிறப்பு ரெயில்கள், வருகிற நவம்பர் முதல் வாரம் வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி நெல்லை- பிலாஸ்பூர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 30-ந் தேதி வரையும், மறு மார்க்க சேவை பிப்ரவரி 1-ந் தேதி வரையும், ராமேசுவரம் - ஓகா சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 28-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை பிப்ரவரி 1-ந்தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.

    மதுரை - பிகானிர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 27-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை ஜனவரி 30-ந்தேதி வரையும் நெல்லை-தாதர் சிறப்பு ரெயில் சேவை ஜனவரி 26-ந்தேதி வரையும், மறு மார்க்க சேவை ஜனவரி 27-ந் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×