என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்பத்தகராறில் பனியன் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்9 Oct 2021 9:06 AM GMT (Updated: 9 Oct 2021 9:06 AM GMT)
ரஞ்சித்குமாரிடம் அவரது மனைவி, குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்றால் மகன்களை அழைத்துக் கொண்டு என் அம்மா வீட்டிற்கு சென்று விடுவேன் என கூறியதாக தெரிகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 37). இவருக்கு நித்யா (32) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு குடிபழக்கம் இருந்ததால் கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் ரஞ்சித்குமாரிடம் அவரது மனைவி, குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்றால் மகன்களை அழைத்துக் கொண்டு என் அம்மா வீட்டிற்கு சென்று விடுவேன் என கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல நித்யா வேலைக்கு சென்றுவிட்டார்.
மகன்கள் இருவரும் அருகே உள்ள தாத்தா வீட்டிற்கு விளையாட சென்று விட்டனர். வீட்டில் தனியே இருந்த ரஞ்சித்குமார் மனைவி சொன்னதை நினைத்து மனம் வருந்தி வீட்டின் கூரை விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ரஞ்சித்குமார் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X