என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
Byமாலை மலர்9 Oct 2021 9:00 AM GMT (Updated: 9 Oct 2021 9:00 AM GMT)
சங்கரலிங்கம் என்பவர் மீது மற்றொரு தரப்பினர் காரை ஓட்டிச்சென்று மோதியதில் அவர் உயிரிழந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் டாஸ்மாக் கடை அருகே கடந்த ஆகஸ்ட் 2-ந்தேதி இரு தரப்பினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடி மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 25) என்பவர் மீது மற்றொரு தரப்பினர் காரை ஓட்டிச் சென்று மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல்லடம் ராயபாளையத்தை சேர்ந்த கதிர் என்கிற கதிர்வேல் (30) தலைமறைவாக இருந்து வந்தார்.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லடம் அருகே மங்கலம் ரோட்டில் அம்மாபாளையம் பிரிவு அருகே மறைந்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பல்லடம் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X