என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயுதபூஜையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
Byமாலை மலர்8 Oct 2021 7:47 AM GMT (Updated: 8 Oct 2021 7:47 AM GMT)
திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி ரெயில் நிலையத்தில் இந்த ரெயில்கள் நின்று செல்லும்.
திருப்பூர்:
ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பூர் வழியாக கோவை - சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது, என சேலம் கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வருகிற 13-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதியில் சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 3 ‘ஏ.சி.,’, 8 படுக்கை வசதி, நான்கு முன்பதிவு உள்ளிட்ட 17 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
வருகிற 17-ந்தேதி மற்றும் நவம்பர் 7-ந்தேதி மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி ரெயில் நிலையத்தில் இந்த ரெயில்கள் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை, 7:30 மணிக்கு கோவை சென்று சேரும். கோவையில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7:20 மணிக்கு சென்னை சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X