என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து நாட்களும் கோவில்களில் வழிபட அனுமதி கேட்டு திருச்செந்தூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்7 Oct 2021 9:00 AM GMT (Updated: 7 Oct 2021 9:00 AM GMT)
கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என திருச்செந்தூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் உள்ள கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி மாநிலம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் இன்று 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில மகளிர் அணி தலைவர் நெல்லையம்மாள், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், இந்து முன்னணி நெல்லை மண்டல செயலாளர் சக்திவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேல் பூஜை நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X