search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் சிவன் கோவிலில்  சிறப்பு பூஜை நடைபெற்ற  காட்சி.
    X
    பல்லடம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற காட்சி.

    பல்லடம் - வெள்ளகோவிலில் மகாளய அமாவாசை வழிபாடு

    சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பல்லடம்:

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமானது மகாளயஅமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் அங்குள்ள 16 அடி உயர சிவலிங்கத்திற்கு சந்தனம், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

    காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த மகாளய அமாவாசை பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவலிங்கத்தை வழிபட்டனர்.

    வெள்ளகோவிலில் மகாளய அமாவாசையையொட்டி வீரகுமாரசாமி கோவிலில் வீரக்குமாரசாமிக்கு தங்க கவசம் அணிவித்தும், செல்லாண்டியம்மன் கோவிலில் செல்லாண்டி அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்தும் சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

    இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  
    Next Story
    ×