என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேந்தமங்கலம் அருகே விவசாயி வீட்டில் செல்போன் திருடிய லாரி டிரைவர் கைது
Byமாலை மலர்6 Oct 2021 6:28 PM GMT (Updated: 6 Oct 2021 6:28 PM GMT)
சேந்தமங்கலம் அருகே விவசாயி வீட்டில் செல்போன் திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள பொட்டணம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் போட்டு விட்டு வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சீரங்கன் (39) என்பவர் சக்திவேல் வீட்டிற்குள் சென்று விட்டு வெளியே சென்றது தெரிந்தது.
இதுகுறித்து சக்திவேல் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சீரங்கன் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X