என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கலூர் அருகே உப்புக்கரை நதியின் குறுக்கே பாலம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்6 Oct 2021 4:59 AM GMT (Updated: 6 Oct 2021 4:59 AM GMT)
மழைக் காலங்களில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்வதற்காக பொதுமக்கள் 4 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகு மலையில் உற்பத்தியாகும் உப்புக்கரை நதி, தங்காய்புதூர் மற்றும் பெரியாரியபட்டி வழியாக சென்று ராமலிங்கபுரம் என்ற இடத்தில் நொய்யலில் கலக்கிறது.
பெரியாரியபட்டி மற்றும் தங்காய்புதூரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்வதற்காக இந்த நதியைக் கடந்து தான் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்வதற்காக பொதுமக்கள் 4 கி.மீ., சுற்றி செல்ல வேண்டி இருந்தது.
மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை ஓட்டி செல்லும் விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகினர். இதன் காரணமாக உப்புக்கரை நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.32 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்படுகிறது. பல ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X