என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே போலீஸ்காரரை அரிவாளுடன் மிரட்டிய 2 பேர் கைது
Byமாலை மலர்1 Oct 2021 11:18 AM GMT (Updated: 1 Oct 2021 11:18 AM GMT)
நெல்லை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை அரிவாளுடன் மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
சீதபற்பநல்லூர் போலீசார் நேற்று இரவு வல்லவன்கோட்டை பகுதியில் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் போலீசார், மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை அனுப்ப முடியும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டனர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளுக்குரிய எந்த ஆவணங்களையும் அவர்கள் ஒப்படைக்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து அரிவாளை எடுத்து, போலீசாரை மிரட்டி தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் சுதாரித்து அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைதானவர்கள் வல்லவன்கோட்டையை சேர்ந்த சிவசுரேஷ் (வயது 19), அபினேஷ் (19) என்று தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ்காரர் நாகேஸ்வரராவ் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அரிவாளை காட்டி மிரட்டியதாக சிவசுரேஷ், அபினேஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
சீதபற்பநல்லூர் போலீசார் நேற்று இரவு வல்லவன்கோட்டை பகுதியில் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் போலீசார், மோட்டார் சைக்கிளுக்குரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை அனுப்ப முடியும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டனர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளுக்குரிய எந்த ஆவணங்களையும் அவர்கள் ஒப்படைக்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து அரிவாளை எடுத்து, போலீசாரை மிரட்டி தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் சுதாரித்து அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைதானவர்கள் வல்லவன்கோட்டையை சேர்ந்த சிவசுரேஷ் (வயது 19), அபினேஷ் (19) என்று தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ்காரர் நாகேஸ்வரராவ் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அரிவாளை காட்டி மிரட்டியதாக சிவசுரேஷ், அபினேஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X