என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்த்தசாரதி கோவிலின் உண்டியல் காணிக்கை 20¾ கிலோ தங்கம், 26¾ கிலோ வெள்ளி
Byமாலை மலர்1 Oct 2021 2:08 AM GMT (Updated: 1 Oct 2021 2:08 AM GMT)
பார்த்தசாரதி கோவிலில் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் மொத்தம் 20 கிலோ 800 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்றுள்ளன.
சென்னை :
கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வந்த தங்கத்தில் தேவையானவை போக, மீதமுள்ளவை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டி மூலம் கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும்’, என சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை மீதான மானியக்கோரிக்கையின்போது தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 2005-ம் ஆண்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 8 கிலோ 217 கிராம் தங்க நகைகளும், 2016-ம் ஆண்டில் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 10 கிலோ 96 கிராம் தங்க நகைகளும், கடந்த 15-ந்தேதி முடிய 2 கிலோ 487 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் என மொத்தம் 20 கிலோ 800 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்றுள்ளன. அதேபோல 26 கிலோ 714 கிராம் 760 மில்லி கிராம் வெள்ளி நகைகளும் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்று உள்ளன.
மேற்கண்ட தகவல் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வந்த தங்கத்தில் தேவையானவை போக, மீதமுள்ளவை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டி மூலம் கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும்’, என சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை மீதான மானியக்கோரிக்கையின்போது தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 2005-ம் ஆண்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 8 கிலோ 217 கிராம் தங்க நகைகளும், 2016-ம் ஆண்டில் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் 10 கிலோ 96 கிராம் தங்க நகைகளும், கடந்த 15-ந்தேதி முடிய 2 கிலோ 487 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் என மொத்தம் 20 கிலோ 800 கிராம் 300 மில்லி கிராம் தங்க நகைகள் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்றுள்ளன. அதேபோல 26 கிலோ 714 கிராம் 760 மில்லி கிராம் வெள்ளி நகைகளும் உண்டியல் காணிக்கையாக பல ஆண்டுகளாக வரப்பெற்று உள்ளன.
மேற்கண்ட தகவல் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X