search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பொக்லைன் எந்திரம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி

    தரகம்பட்டி அருகே பொக்லைன் எந்திரம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரகம்பட்டி:

    தரகம்பட்டி அருகே உள்ள வாழ்வார்மங்கலம் தென்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 49), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் வாழ்வார் மங்கலத்திலிருந்து வீரசிங்கம்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அதே நேரம் பொக்லைன் எந்திரமும் வளைவில் திரும்பியது. இதனால் பொக்லைன் எந்திரத்தின் பின்பகுதியில் உள்ள பக்கெட் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த தங்கராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமா இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்திற்கு காரணமான பொக்லைன் டிரைவர் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×