search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் கார்டு
    X
    ஸ்மார்ட் கார்டு

    புதிய ரேசன் கார்டு கேட்டு 10 லட்சம் பேர் விண்ணப்பம்

    கடந்த 5 மாதங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65 ஆயிரத்து 3 பேர், சேலம் மாவட்டத்தில் 59 ஆயிரத்து 495 பேர் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய ரேசன் கார்டு கிடைக்க வழிவகை செய்துள்ளார். அதன்படி அடிப்படையில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கார்டு கிடைத்து வருகிறது.

    முக ஸ்டாலின்

    கடந்த மே மாதம் முதல் இந்த மாதம் 26-ந்தேதி வரை (செப்டம்பர்) தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 பேர் புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    அதில், 7 லட்சத்து 28 ஆயிரத்து 703 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2 லட்சத்து 61 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    மேலும், 6 லட்சத்து 65 ஆயிரத்து 102 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 63 ஆயிரத்து 601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும், 63 ஆயிரத்து 780 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும், உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென்சென்னையில் 67 ஆயிரத்து 051 நபர்கள் விண்ணப்பித்ததில், 36 ஆயிரத்து 815 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,  12 ஆயிரத்து 754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 ஆயிரத்து 829 நபர்களுக்கு
    ஸ்மார்ட் கார்டு
    வழங்கப்பட்டுள்ளதோடு, 8,986 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வடசென்னையில் 55 ஆயிரத்து 962 நபர்கள் விண்ணப்பித்ததில், 28 ஆயிரத்து 624 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 10 ஆயிரத்து 741 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    அதில், 24 ஆயிரத்து 234 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 4,390 பேருக்கு அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 5 மாதங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65 ஆயிரத்து 3 பேர், சேலம் மாவட்டத்தில் 59 ஆயிரத்து 495 பேர் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.


    Next Story
    ×