என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு
Byமாலை மலர்29 Sep 2021 5:05 AM GMT (Updated: 29 Sep 2021 5:05 AM GMT)
தென்காசி மாவட்டத்தில் 132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 125.50 அடியாக உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைப் பகுதிகள், மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசத்தில் 5 மில்லி மீட்டரும், குண்டாறில் 4 மில்லி மீட்டரும், கன்னடியன் பகுதியில் 3 மில்லி மீட்டரும், கருப்பாநதியில் 2 மில்லி மீட்டரும், தென்காசியில் 1.4 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 83.15 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து இன்று காலை 85.30 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1662.85 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 504.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 100.20 அடியாகவும், மணிமுத்தாறு அணைநீர் மட்டம் 63.25 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 125.50 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 7 அடியே உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ள நிலையில் கடனாநதி நீர்மட்டம் 63.80 அடியாகவும், ராமநதி அணைநீர் மட்டம் 59.50 அடியாகவும், கருப்பாநதி அணைநீர் மட்டம் 53.15 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் தேவையும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் விவசாய தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போதே அணை மற்றும் மலைப் பகுதியில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைப் பகுதிகள், மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. பாபநாசத்தில் 5 மில்லி மீட்டரும், குண்டாறில் 4 மில்லி மீட்டரும், கன்னடியன் பகுதியில் 3 மில்லி மீட்டரும், கருப்பாநதியில் 2 மில்லி மீட்டரும், தென்காசியில் 1.4 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 83.15 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து இன்று காலை 85.30 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1662.85 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 504.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 100.20 அடியாகவும், மணிமுத்தாறு அணைநீர் மட்டம் 63.25 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 125.50 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 7 அடியே உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ள நிலையில் கடனாநதி நீர்மட்டம் 63.80 அடியாகவும், ராமநதி அணைநீர் மட்டம் 59.50 அடியாகவும், கருப்பாநதி அணைநீர் மட்டம் 53.15 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் தேவையும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் விவசாய தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போதே அணை மற்றும் மலைப் பகுதியில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X