என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்28 Sep 2021 9:29 AM GMT (Updated: 28 Sep 2021 9:29 AM GMT)
குறைகளை குறையாகவே நினைக்காமல் அதனை சரிசெய்து விட முடியும் என்ற மனநிலைக்கு வர வேண்டும் என டீன் அறிவுறுத்தினார்.
திருப்பூர்:
உலக காதுகேளாதோர் வாரத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காதுகேளாதோர் பிரிவு துறைத்தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 10 பேருக்கு காதுகேட்கும் கருவி வழங்கப்பட்டது. மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் தலைமை வகித்து பேசுகையில், மனிதனுக்கு ஆறறிவும் முக்கியம். அதில் செவித்திறன் மிக அவசியம். குறைகளை குறையாகவே நினைக்காமல் அதனை சரிசெய்து விட முடியும் என்ற மனநிலைக்கு வர வேண்டும்.
மனதில் தைரியம் இருந்தால் உடல் தானாக சரியாக விடும். காதுகேட்கவில்லை, காதில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் டாக்டரிடம் தெரிவியுங்கள். தக்க ஆலோசனையை பெற்று சிகிச்சையளிக்கிறோம் என்றார். காதுகேட்கும் கருவி, செயல்படும் விதம், கருவி பயன்படுத்துவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து துறையின் உதவி பேராசிரியர் ரகுராம் நோயாளிகளுக்கு விளக்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X