என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பணி தேர்வு - வெளியூர் மாணவர்களுக்கு ஜூம் மீட்டிங் மூலம் பயிற்சி
Byமாலை மலர்26 Sep 2021 8:10 AM GMT (Updated: 26 Sep 2021 8:10 AM GMT)
ஊரடங்கு காலத்தில் ‘ஆன்லைன்’ மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது நேரடி பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு எழுதுவோர் பயிற்சிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இலவச பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடக்கிறது.
இந்தநிலையில் நேரில் வர இயலாதவர்கள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘ஜூம்‘ மீட்டிங் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘ஆன்லைன்’ மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது நேரடி பயிற்சி முகாம் நடந்து வருகிறது. நேரில் வரமுடியாதவர், வெளிமாவட்ட மாணவர் வசதிக்காக நேரடி வகுப்பு ‘ஜூம் மீட்டிங்’ வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம் திருப்பூர் மட்டுமல்லாது பிற மாவட்ட மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X