search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வடமதுரை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

    வடமதுரை அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடமதுரை:

    வடமதுரை அருகே செங்குறிச்சி வல்லம்பட்டியை சேர்ந்தவர் சந்தனமுருகேசன் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் திருமலைக்கேணி முருகன் கோவிலில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை சந்தனமுருகேசன் டீ வாங்குவதற்காக குரும்பபட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தனமுருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தனமுருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×