என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக அதிரடி- மேலும் 183 ரவுடிகள் கைது
Byமாலை மலர்25 Sep 2021 5:19 AM GMT (Updated: 25 Sep 2021 5:19 AM GMT)
சேலம் மாநகர் மற்றும் புறநகர் என மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் நடந்த வேட்டையில் 333 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளை அடுத்து ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா, துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை நடந்த தொடர் வேட்டையில் 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் மாநகரில் மட்டும் 2 நாளில் 119 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல சேலம் புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை தேடுதல் வே ட்டையில் ஈடுபட்ட போலீசார் 75 ரவுடிகளை கைது செய்தனர். பின்னர் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடந்த வேட்டையில் 139 ரவுடிகளை கைது செய்தனர். இதனால் 2 நாட்களில் சேலம் புறநகரில் 214 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் என மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் நடந்த வேட்டையில் 333 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவடிகள் வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளை அடுத்து ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா, துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை 75 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை நடந்த தொடர் வேட்டையில் 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் மாநகரில் மட்டும் 2 நாளில் 119 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல சேலம் புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தலைமையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை தேடுதல் வே ட்டையில் ஈடுபட்ட போலீசார் 75 ரவுடிகளை கைது செய்தனர். பின்னர் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடந்த வேட்டையில் 139 ரவுடிகளை கைது செய்தனர். இதனால் 2 நாட்களில் சேலம் புறநகரில் 214 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் என மாவட்டம் முழுவதும் 2 நாட்களில் நடந்த வேட்டையில் 333 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவடிகள் வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X