search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdies Arrested"

    • ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.

    ஆவடி:

    ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று அதிகாலை நடந்த ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர், கோர்ட்டு வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 5 பேர் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சென்னையை குற்றம் இல்லாத நகரமாக மாற்றவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சென்னையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பல குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றசெயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்கள், கொலை, கொலைமுயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஒரே நாளில் இந்த சிறப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்,

    இந்த அதிரடி வேட்டையின்போது சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த 764 ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தனிப்படை போலீசார் அதிரடி சோதனை செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்து வருவதாக எச்சரித்தனர். இனி குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

    அப்போது குற்றசெயல்களில் ஈடுபட்டதால் கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 14 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    ×