search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிப்பு
    X
    பணம் பறிப்பு

    தக்கலை அருகே மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் பறிப்பு

    தக்கலை அருகே மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள கிருஷ்ணன் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியாவதி (வயது 61). இவர் கந்தன் விளை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்திருந்த தனது நகையை திருப்புவதற்காக இன்று ரூ.50 ஆயிரத்துடன் நடந்து சென்றார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பிரியாவதியிடம் இருந்த பணப்பையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவதி கூச்சலிட்டார்.

    இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்காணிப்பு கேமிராவில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும் அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருப்பதும் இன்னொருவர் முகத்தை மறைத்திருக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    இதை அடிப்படையாக வைத்து மூதாட்டியிடம் பணம் பறித்த மர்ம வாலிபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×