search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாநகராட்சியில் உதவி ஆணையாளர்கள் இடமாற்றம்

    உதவி ஆணையாளர்(வருவாய்) தங்கவேல்ராஜன் கணக்கு பிரிவுக்கும், கணக்கு பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையாளர் சந்தான நாராயணன் நிர்வாகத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
    திருப்பூர்:
     
    திருப்பூர் மாநகராட்சியின் 2-வது மண்டல உதவி ஆணையாளராக இருந்த செல்வநாயகம் 4-வது மண்டலத்துக்கும், 4-வது மண்டல உதவி ஆணையாளராக இருந்த கண்ணன் 2-வது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோல் உதவி ஆணையாளர்(வருவாய்) தங்கவேல்ராஜன் கணக்கு பிரிவுக்கும், கணக்கு பிரிவில் பணியாற்றிய உதவி ஆணையாளர் சந்தான நாராயணன் நிர்வாகத்துக்கும், கணக்கு அலுவலராக இருந்த செந்தில்குமார் வருவாய் உதவி ஆணையாளராகவும் பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார்.
    Next Story
    ×