என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் - நாளை நடக்கிறது
Byமாலை மலர்24 Sep 2021 6:50 AM GMT (Updated: 24 Sep 2021 6:50 AM GMT)
கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நேரடியாக நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக சமர்ப்பித்து பயனடையலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை 25-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நேரடியாக நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக சமர்ப்பித்து பயனடையலாம்.
மேலும் விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக் கலை அலுவலர், வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X