என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க கோரி திருப்பூரில் நாளை விவசாயிகள் போராட்டம்
Byமாலை மலர்24 Sep 2021 5:22 AM GMT (Updated: 24 Sep 2021 5:22 AM GMT)
ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 750 கிலோ விதை வெங்காயம் வாங்க வேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் பயிரை வளர்க்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் வியாபாரிகள் கிலோ ரூ.8க்கு கொள்முதல் செய்வதால் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
விதை வெங்காயம் கிலோ ரூ. 75 க்கு வாங்கி விதைத்தோம். தொடர்ந்து 85 நாட்கள் தண்ணீர் விட்டும், களைபறித்தும் பராமரித்து வெங்காயம் அறுவடைக்கு வந்துவிட்டது. இதுவரை ஓரளவு விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக, விவசாயிகள் புலம்புகின்றனர்.
ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 750 கிலோ விதை வெங்காயம் வாங்க வேண்டும். தொடர்ந்து, 90 நாட்கள் பயிரை வளர்க்க வேண்டும். தொழிலாளர் கூலி பெரும் செலவாக இருக்கிறது.
வழக்கமாக 20 ரூபாய் வரை விலைக்கு வாங்கப்பட்ட நிலைமாறி கிலோ ரூ.8க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ஐந்து டன் வெங்காயம் உற்பத்தியானாலும் ரூ. 80 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் கிலோ ரூ.8க்கு வாங்கிச்சென்று, மக்களுக்கு ரூ.20க்கு விற்கின்றனர். வெங்காயம் 20 கிலோ சிப்பம் ரூ.180 முதல் 250 வரை மட்டுமே விற்கப்படுகிறது.
தமிழக அரசு, வெங்காயத்துக்கு சரியான விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்:
வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கிலோவுக்கு 40 ரூபாய் விலை கிடைக்க வேண்டும். வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க கோரி நாளை 25-ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X