என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாயல்குடி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
Byமாலை மலர்23 Sep 2021 10:23 AM GMT (Updated: 23 Sep 2021 10:23 AM GMT)
சாயல்குடி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே துரைசாமிபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாயல்குடி மாதவன் நகரில் வசிக்கும் முனியராஜ் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
தினமும் பூசாரி காலை 6 மணிக்கு கோவிலை திறந்து இரவு 9 மணிக்கு அடைத்துவிட்டு செல்வது வழக்கம்.
21.09.201-ந்தேதி இரவு 9 மணிக்கு கோவிலை அடைத்து விட்டு வழக்கம் போல் நேற்று காலை 6 மணிக்கு பூசாரி கோவிலை திறந்து பார்த்தபோது சாமி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைந்த நிலையில் இருந்தது.
உண்டியலில் இருந்த பணம் மற்றும் வேண்டுதலுக்கு உண்டியலில் போடப்பட்ட 1 பவுன் தங்க தாலியும் மாயமானது.
இரவில் யாரோ இரும்பு கிரில் கம்பி வழியே நுழைந்து உண்டியலின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். மேலும் உண்டியலில் இருந்த ரூ.15 ஆயிரமும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து துரை சாமிபுரம் நாடார் உறவின் முறை சங்கத்தின் தலைவர் முத்துசாமி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே துரைசாமிபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாயல்குடி மாதவன் நகரில் வசிக்கும் முனியராஜ் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
தினமும் பூசாரி காலை 6 மணிக்கு கோவிலை திறந்து இரவு 9 மணிக்கு அடைத்துவிட்டு செல்வது வழக்கம்.
21.09.201-ந்தேதி இரவு 9 மணிக்கு கோவிலை அடைத்து விட்டு வழக்கம் போல் நேற்று காலை 6 மணிக்கு பூசாரி கோவிலை திறந்து பார்த்தபோது சாமி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைந்த நிலையில் இருந்தது.
உண்டியலில் இருந்த பணம் மற்றும் வேண்டுதலுக்கு உண்டியலில் போடப்பட்ட 1 பவுன் தங்க தாலியும் மாயமானது.
இரவில் யாரோ இரும்பு கிரில் கம்பி வழியே நுழைந்து உண்டியலின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். மேலும் உண்டியலில் இருந்த ரூ.15 ஆயிரமும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து துரை சாமிபுரம் நாடார் உறவின் முறை சங்கத்தின் தலைவர் முத்துசாமி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X