என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்திர பதிவுக்காக இரவு வரை காத்திருக்கும் பொதுமக்கள்
Byமாலை மலர்23 Sep 2021 4:36 AM GMT (Updated: 23 Sep 2021 4:36 AM GMT)
தமிழக அரசு உத்தரவின்படி தினசரி 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. சுப முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பத்திரங்கள் பதிவுக்கு வருகின்றன.
திருப்பூர்:
பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் பல்லடம், பொங்கலூர், திருப்பூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி என 39 கிராமங்கள் உள்ளன. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அதிக அளவில் ஆவணங்கள் வருவதால் தினசரி இரவு வரை பத்திரப்பதிவு பணிகள் நீடித்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
தமிழக அரசு உத்தரவின்படி தினசரி 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. சுபமுகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பத்திரங்கள் பதிவுக்கு வருகின்றன.
சாதாரண நாட்களிலேயே பணிகள் இரவு வரை நீடிக்கின்றன. அலுவலக உதவியாளர் 31-ந் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய பணியாளர் நியமிக்கப்படவில்லை.
அதன் காரணமாக சீல் வைப்பது, பத்திர வினியோகம் உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன. இதனால் பத்திரம் பெற இரவு வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X