search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    உள்ளாட்சித்தேர்தல் குறித்து அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை

    அ.தி.மு.க.வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யபாடுபட வேண்டும் என உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,பேசினார்.
    மடத்துக்குளம்,

    ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் வரவேற்றார். 

    கூட்டத்தில் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    உடுமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளஇராணிப்பேட்டை மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரக்கோணம் ஒன்றியத்தில் சிறப்பாக தேர்தல் களப்பணியாற்றி அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.  
    Next Story
    ×