என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,600 பேருக்கு தொழில்முனைவோர் பயிற்சி
Byமாலை மலர்21 Sep 2021 5:43 AM GMT (Updated: 21 Sep 2021 5:43 AM GMT)
இ.டி.ஐ.ஐ., மூலம் இந்த நிதியாண்டில் 15 ஆயிரம் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தொழில்முனைவோர் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க மையத்தின் திருப்பூர் கிளை சார்பில், ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன (இ.டி.ஐ.ஐ.,) இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது:
இ.டி.ஐ.ஐ., மூலம் இந்த நிதியாண்டில் 15 ஆயிரம் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 3,600 பேருக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே தொழில் துவங்கியோருக்கு அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொற்று காரணமாக, நேரடி பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நீட்ஸ், யு.ஒய்.இ.ஜி.பி., பயிற்சிகளை ஆன்லைனில் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான திட்ட மாதிரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X