search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடலில் பற்றிய தீயுடன் மாணிக்கம் வீதியில் ஓடிய காட்சிகள் சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகி உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    உடலில் பற்றிய தீயுடன் மாணிக்கம் வீதியில் ஓடிய காட்சிகள் சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகி உள்ளதை படத்தில் காணலாம்.

    கள்ளகாதலியுடனான தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பொதுமக்கள் அதிர்ச்சி

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து உடல் முழுக்க தீப்பற்றி எரிந்த நிலையில் மாணிக்கம் வீதியில் ஓடி வந்தார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 38). இவர் பல்லடம் பெரியார் நகர் 2-வது வீதியில் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளியான மாணிக்கம் முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக துர்க்கை அம்மாள் என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கணவன் - மனைவியாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெரியவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து உடல் முழுக்க தீப்பற்றி எரிந்த நிலையில் மாணிக்கம் வீதியில் ஓடி வந்தார். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

    பின்னர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணிக்கத்தை மேல் சிகிச்சைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். 

    இதனிடையே போலீசாரிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது உடலின் மீது கள்ளக்காதலி மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.  

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்க்கை அம்மாள் தீ வைத்ததால் மாணிக்கம் இறந்தாரா? அல்லது  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா ? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்தநிலையில் கட்டிட தொழிலாளி மாணிக்கம் உடல் முழுக்க தீப்பற்றி எரியும் நிலையில் வீதியில் ஓடிவந்த சி.சி.டி.வி., காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்களிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×