என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு ஆதரவாக 'பந்த்’ 2 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்20 Sep 2021 8:33 AM GMT (Updated: 20 Sep 2021 8:33 AM GMT)
விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 27-ந்தேதி தேசிய அளவிலான பந்த் நடக்கிறது.
திருப்பூர்:
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி தேசிய அளவிலான ‘பந்த்’ நடக்க உள்ளது.
இதுகுறித்து ஆலோசிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சங்க பிரதிநிதிகள் ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), அன்பு (மோட்டார் சங்கம்), சேகர் ( ஏ.ஐ.டி.யு.சி.,), நடராசன் (துப்புரவு தொழிலாளர் சங்கம்), ரங்கசாமி (எல்.பி.எப்.,), மனோகரன் (எம்.எல்.எப்.,), பெருமாள் (ஐ.என்.டி.யு.சி.,), முத்துசாமி (எச்.எம்.எஸ்.,) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 27-ந்தேதி தேசிய அளவிலான பந்த் நடக்கிறது. அதற்காக 23, 24-ந் தேதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, துண்டு அறிக்கை வெளியிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தின் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X