என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விலை தொடர் சரிவால் விவசாயிகள் கவலை
Byமாலை மலர்19 Sep 2021 8:38 AM GMT (Updated: 19 Sep 2021 8:38 AM GMT)
கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அதே ஆடு ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும் . இந்த சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் சந்தையில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை திருப்பி கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அதே ஆடு ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதால் வியாபாரிகளின் வரத்து குறைந்ததாலும் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது என்று கூறப்படுகிறது.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.100 குறைந்து ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.5000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. கடந்த ஒரு மாதமாக நடைபெறும் வாரச்சந்தையில் ஆடுகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X