search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுபானம் குடிக்க பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது

    திண்டுக்கல் அருகே மதுபானம் குடிக்க பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). மிக்சர் வியாபாரி. நேற்று இவர், வேடசந்தூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு மிக்சர் பாக்கெட்டுகளை விற்பனை செய்தார். வேடசந்தூர் குங்குமக்காளியம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் மதுக்கடை முன்பு உள்ள பெட்டிக்கடையில் அவர் விற்பனைக்காக மிக்சர் பாக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வேடசந்தூர் சாலைத்தெருவை சேர்ந்த யாகூப் (35) என்பவர், சரவணனிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க மறுக்கவே, சரவணனின் செல்போனை யாகூப் பறிக்க முயன்றார். இதனை தடுக்க முயன்றபோது, அருகே கிடந்த இரும்பு கம்பியால் சரவணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு யாகூப் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாகூப்பை கைது செய்தனர்.
    Next Story
    ×