என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபானம் குடிக்க பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்19 Sep 2021 8:24 AM GMT (Updated: 19 Sep 2021 8:24 AM GMT)
திண்டுக்கல் அருகே மதுபானம் குடிக்க பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). மிக்சர் வியாபாரி. நேற்று இவர், வேடசந்தூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு மிக்சர் பாக்கெட்டுகளை விற்பனை செய்தார். வேடசந்தூர் குங்குமக்காளியம்மன் கோவில் தெருவில் டாஸ்மாக் மதுக்கடை முன்பு உள்ள பெட்டிக்கடையில் அவர் விற்பனைக்காக மிக்சர் பாக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வேடசந்தூர் சாலைத்தெருவை சேர்ந்த யாகூப் (35) என்பவர், சரவணனிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க மறுக்கவே, சரவணனின் செல்போனை யாகூப் பறிக்க முயன்றார். இதனை தடுக்க முயன்றபோது, அருகே கிடந்த இரும்பு கம்பியால் சரவணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு யாகூப் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாகூப்பை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X