என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மளிகை கடை - பள்ளியில் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்17 Sep 2021 10:44 AM GMT (Updated: 17 Sep 2021 10:44 AM GMT)
ஊத்துக்குளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி கொடியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இதேபோல் திம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த மர்ம ஆசாமி அங்கிருந்த லேப்டாப்பை திருடி சென்றார். தொடர் திருட்டு தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் ஊத்துக்குளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது கார்த்திக் (வயது 22). என்பதும் இவர் தான் மளிகை கடை மற்றும் பள்ளியில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X