search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    மளிகை கடை - பள்ளியில் திருடிய வாலிபர் கைது

    ஊத்துக்குளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி கொடியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை திருடி சென்றுள்ளனர். 

    இதேபோல் திம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  வகுப்பறைக்குள் புகுந்த மர்ம ஆசாமி அங்கிருந்த லேப்டாப்பை திருடி சென்றார். தொடர் திருட்டு தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர். 

    இந்த நிலையில் ஊத்துக்குளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். 

    இதனையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது கார்த்திக் (வயது 22). என்பதும் இவர் தான் மளிகை கடை மற்றும் பள்ளியில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×