search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வாலிபரை கொன்று புதைத்தகணவன் - மனைவி குண்டர் சட்டத்தில் கைது

    வாலிபரை கொன்று புதைத்த கணவன் - மனைவி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி., சசாங் சாய் உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்த ரமேஷ் (32) அவரது மனைவி சித்ரா (23) ஆகியோர் சேர்ந்து மணிகண்டன் என்பவரை கொலை செய்து  தோட்டத்தில் புதைத்துள்ளனர். 

    இதுகுறித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ரமேஷ் மற்றும் மனைவி சித்ரா,  உறவினர் பிரபாகரன்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே வாலிபரை கொன்று புதைத்த கணவன் - மனைவி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி., சசாங் சாய் உத்தரவிட்டார்.  

    இதனையடுத்து கோவை சிறையில் உள்ள இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை அவர்களிடம் போலீசார் வழங்கினர்.
    Next Story
    ×