என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலிபரை கொன்று புதைத்தகணவன் - மனைவி குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்17 Sep 2021 10:34 AM GMT (Updated: 17 Sep 2021 10:34 AM GMT)
வாலிபரை கொன்று புதைத்த கணவன் - மனைவி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி., சசாங் சாய் உத்தரவிட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் குண்டடம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்த ரமேஷ் (32) அவரது மனைவி சித்ரா (23) ஆகியோர் சேர்ந்து மணிகண்டன் என்பவரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ரமேஷ் மற்றும் மனைவி சித்ரா, உறவினர் பிரபாகரன்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே வாலிபரை கொன்று புதைத்த கணவன் - மனைவி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி., சசாங் சாய் உத்தரவிட்டார்.
இதனையடுத்து கோவை சிறையில் உள்ள இருவருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை அவர்களிடம் போலீசார் வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X