என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சி அருகே தேர்தலுக்காக பொதுமக்களுக்கு வழங்கிய அரிசி பறிமுதல்
Byமாலை மலர்17 Sep 2021 4:22 AM GMT (Updated: 17 Sep 2021 4:22 AM GMT)
கனங்கூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள ஒருவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக வீடு வீடாக சென்று 25 கிலோ அரிசி மூட்டை வழங்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே கனங்கூர் கிராம காலனி பகுதியில் மினிவேனில் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதாக வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது இவர்களை பார்த்ததும் டிரைவர் தப்பி ஓடினார்.
அப்போது போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் கனங்கூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள ஒருவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக வீடு வீடாக சென்று 25 கிலோ அரிசி மூட்டை வழங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு அரிசி வழங்கியதாக பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் வீரமுத்து (வயது 61) என்பவர் மீது புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வீரமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மினி வேன் மற்றும் அதில் இருந்த 3 மூட்டை அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தல் ஆதாயத்துக்காக வீடு வீடாக சென்று அரிசி வழங்கிய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி அருகே கனங்கூர் கிராம காலனி பகுதியில் மினிவேனில் பொதுமக்களுக்கு அரிசி வழங்குவதாக வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது இவர்களை பார்த்ததும் டிரைவர் தப்பி ஓடினார்.
அப்போது போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் கனங்கூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள ஒருவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக வீடு வீடாக சென்று 25 கிலோ அரிசி மூட்டை வழங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு அரிசி வழங்கியதாக பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மினி சரக்கு வாகன டிரைவர் வீரமுத்து (வயது 61) என்பவர் மீது புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வீரமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மினி வேன் மற்றும் அதில் இருந்த 3 மூட்டை அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தல் ஆதாயத்துக்காக வீடு வீடாக சென்று அரிசி வழங்கிய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X