என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் பரிதாபம் - விபத்தில் மின்வாரிய பெண் அதிகாரி பலி
Byமாலை மலர்16 Sep 2021 8:50 AM GMT (Updated: 16 Sep 2021 8:50 AM GMT)
விபத்து குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த வர்ஹாரூன். இவரது மனைவி ஷாசுன்நிஷா (வயது 42). இவர் இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் மின் வாரியத்தில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக மொபட்டில் சென்றார். மங்கலம் சாலை வடக்கு தோட்டம் பகுதியில் செல்லும் போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஷாசுன்நிஷா உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் உள்ள பள்ளத்தில் ஏறி இறங்கும் போது நிலைதடுமாறியதில் ஷாசுன் நிஷா இறந்ததாகவும், அந்த வழியாக வந்த லாரி மொபட்டில் மோதியதன் காரணமாக இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X